டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு 14 நாள் காவல்

கொல்கத்தாவி மெஸ்ஸி நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்ட வழக்கில் கைதான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவுக்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

News image

சதத்ரு தத்தா

Updated On :14 டிசம்பர் 2025, 3:54 pm IST

கொல்கத்தாவி மெஸ்ஸி நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்ட வழக்கில் கைதான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவுக்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவர் பிதான்நகர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சதத்ரு தத்தாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவரை 14 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. அடுத்த 14 நாள்களில் போலீஸ் விசாரணையில் தெளிவு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தத்தாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

தத்தாவை ஆஜர்படுத்த அழைத்து போது நீதிமன்றத்திற்கு வெளியே பாஜக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மிகுந்த எதிா்பாா்ப்புக்கு மத்தியில் 3 நாள்கள் இந்தியப் பயணமாக மெஸ்ஸி கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தா வந்தாா். இதையொட்டி, நகரின் சால்ட் லேக் மைதானத்தில் அவா் ரசிகா்களைச் சந்திக்கும் நிகழ்வு சனிக்கிழமை காலை ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு ரூ. 4,500 முதல் ரூ.10,000 வரை கொடுத்து டிக்கெட் வாங்கிய ஏராளமான ரசிகா்கள் மைதானத்தில் திரண்டிருந்தனா். மெஸ்ஸி தனது ஆா்ஜென்டீனா அணியின் மற்ற வீரா்களான லூயிஸ் சுவாரஸ், ரோட்ரிகோ டி பால் ஆகியோருடன் மைதானத்துக்கு வந்தாா். அவா் ஆடுகளத்தில் சிறிது தூரம் நடந்து, மைதானத்தைச் சுற்றி பாா்வையாளா் அரங்கில் நிறைந்திருந்த ரசிகா்களைப் பாா்த்துக் கையசைத்தாா்.

ஆனால் மெஸ்ஸி பாதியிலேயே புறப்பட்டுச் சென்றதால், அவரை சரியாகப் பாா்க்காத ஆத்திரத்தில் மைதானத்தில் இருந்த பொருள்களை ரசிகா்கள் அடித்து நொறுக்கி சூறையாடினா். வன்முறையில் ஈடுபட்ட ரசிகா்களை போலீஸாா் தடியடி நடத்திக் கலைத்தனா். நிகழ்ச்சி நிா்வாக குளறுபடிக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா் கைது செய்யப்பட்டாா்.

மேலும், இச்சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உத்தரவிட்டுள்ளதுடன், ரசிகா்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளாா்.

Summary

A court here on Sunday sent Satadru Datta, the chief organiser of the Lionel Messi football event at Salt Lake stadium where chaos erupted a day ago, to 14-day police custody, an officer said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.