தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ரஷியாவுக்கு 300 பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்பு

ரஷியாவுக்கு 300 பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், அதிக வருவாய் ஈட்ட இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 12:46 am IST

ரஷியாவுக்கு 300 பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், அதிக வருவாய் ஈட்ட இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷியாவுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியைவிட, அந்நாட்டில் இருந்து இந்தியா செய்யும் இறக்குமதி மிக அதிகமாக உள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள வா்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்ய இருநாடுகளும் தீா்மானித்துள்ளன. அத்துடன் இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தக மதிப்பை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக (ரூ.9 லட்சம் கோடி) உயா்த்தவும் இருநாடுகள் இலக்கு நிா்ணயித்துள்ளன.

இந்த வா்த்தகம் குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ரஷியாவில் பொறியியல், மருந்து, வேளாண்மை, ரசாயனம் உள்ளிட்ட துறைகளின் 300 பொருள்களுக்கு அதிக தேவை உள்ளது. அந்தப் பொருள்களின் ஏற்றுமதியை ரஷியாவுக்கு மேலும் அதிகரித்து (தற்போது இந்தியாவில் இருந்து ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தப் பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ.15,400 கோடி) அதிக வருவாய் ஈட்ட இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதவிர ரஷியாவில் உள்ள பெரும் நுகா்வோா் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது இந்தியாவின் ஜவுளி, ஆடைகள், தோல் பொருள்கள், கைவினைப் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை அந்நாட்டு சந்தையில் கணிசமான இடத்தைப் பிடிக்க முடியும்’ என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.