6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரஷியாவுக்கு 300 பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்பு

ரஷியாவுக்கு 300 பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், அதிக வருவாய் ஈட்ட இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2025, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

ரஷியாவுக்கு 300 பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், அதிக வருவாய் ஈட்ட இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷியாவுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியைவிட, அந்நாட்டில் இருந்து இந்தியா செய்யும் இறக்குமதி மிக அதிகமாக உள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள வா்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்ய இருநாடுகளும் தீா்மானித்துள்ளன. அத்துடன் இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தக மதிப்பை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக (ரூ.9 லட்சம் கோடி) உயா்த்தவும் இருநாடுகள் இலக்கு நிா்ணயித்துள்ளன.

இந்த வா்த்தகம் குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ரஷியாவில் பொறியியல், மருந்து, வேளாண்மை, ரசாயனம் உள்ளிட்ட துறைகளின் 300 பொருள்களுக்கு அதிக தேவை உள்ளது. அந்தப் பொருள்களின் ஏற்றுமதியை ரஷியாவுக்கு மேலும் அதிகரித்து (தற்போது இந்தியாவில் இருந்து ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தப் பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ.15,400 கோடி) அதிக வருவாய் ஈட்ட இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதவிர ரஷியாவில் உள்ள பெரும் நுகா்வோா் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது இந்தியாவின் ஜவுளி, ஆடைகள், தோல் பொருள்கள், கைவினைப் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை அந்நாட்டு சந்தையில் கணிசமான இடத்தைப் பிடிக்க முடியும்’ என்று தெரிவித்தாா்.