பத்தனம்திட்டா: கேரள மாநிலம் சபரிமலையில் நடந்து வரும் மண்டல பூஜையில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள் என்று கோயில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
பொதுவாக வார இறுதி நாள்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் வார நாள்களிலேயே சபரிமலைக்குச் சென்றதால், வார நாள்களில் கூட்டம் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மாற்றி யோசித்ததில் தவறில்லை. ஆனால் எல்லோருமே மாற்றி யோசித்ததால்தான் தவறாகிவிட்டது.
கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்து. ஆனால், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு இந்த ஆண்டு சபரிமலை தேவஸ்தானம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து, பக்தர்கள் விரைவாகவும் அமைதியாகவும் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தது.
கடந்த ஆண்டு, இதே மண்டல பூஜையில், இதேக் காலக்கட்டத்தில் சுவாமி தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 25 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் கோயில் நிர்வாகி கூறினார்.
மண்டல பூஜை ஆரம்ப நாள்களில் கடுமையான கூட்டம் நிலவியது, பிறகு படிப்படியாக கூட்டம் குறைந்து, பல்வேறு முறையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு முன்பதிவுகள் செய்து வந்ததால் திட்டமிட்டபடி சுவாமி தரிசனம் செய்து செல்ல வழிவகை ஏற்பட்டதாக்வும் கூறப்படுகிறது.
பக்தர்கள் முன்கூட்டியே தேதிகளை முன்பதிவு செய்துகொண்டு, தரிசனத்துக்கு வரும்போது, அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய போதிய அவகாசம் கிடைக்கும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல், வார இறுதி நாள்களில் கூட்டம் குறைவாகவும், இந்த ஆண்டு மட்டும் வாரநாள்களில் கூட்டம் அலைமோதுவதையும் பார்க்க முடிவதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், டிசம்பர் மாத இறுதியில் இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
The pilgrim turnout at Sabarimala Lord Ayyappa Temple here has crossed 25 lakh in the ongoing annual Mandalam pilgrimage season, a senior official said on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அபிராமி உடனுறை ஜகன்நாத பரமேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா! ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

ஜகன்நாத பரமேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா: திரளானோர் பங்கேற்பு!

அமர்நாத் யாத்திரை: இதுவரை 1.45 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

தமிழக கோயில்களில் இணையவழி முன்பதிவு தரிசன முறை அமல்படுத்தப்பட இருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



