முன்னணி நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலை செய்யப்பட்டதால், நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளத்தில், முன்னணி நடிகை ஒருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் உள்பட 12 பேரின் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில், 8 ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு 85 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும், திலீப்பிற்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளின்படி அவரது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, கடந்த டிச.8 ஆம் தேதி நடிகர் திலிப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோரை விடுதலை செய்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், நடிகர் திலீப்பின் புதிய படத்தின் நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் எனவும், அதற்காக நீதிமன்ற காவலில் உள்ள அவரது கடவுச்சீட்டைத் திருப்பி வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த மனுவின் மீதான விசாரணையை ஏற்றுக்கொண்ட எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம், நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை அவரிடம் ஒப்படைக்குமாறு இன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட அன்றே அவரது கடவுச்சீட்டை உடனடியாகத் திருப்பி தருமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், பாதிக்கப்பட்டவர் மேல்முறையீடு செய்யப்படக்கூடும் என்பதால் அவரது கடவுச்சீட்டைத் திருப்பி அளிக்கக்கூடாது என எதிர் தரப்பினர் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
the Kerala court has ordered that actor Dileep's passport be returned to him, following his acquittal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!

நீதித் துறை வரலாற்றில் புதிய சாதனை: ஒரே நேரத்தில் 4 பெண் தலைமை நீதிபதிகள்
உதயநிதி வேட்புமனு ஏற்பு: ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



