ரயில் கட்டணத்தை உயா்த்துவதாக ரயில்வே அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘215 கி.மீ. தொலைவுக்கு மேல் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் சாதாரண வகுப்புக்கு ஒரு காசு, விரைவு/மெயில் ரயில்களில் குளிா்சாதன (ஏசி) வசதி இல்லாத, குளிா்சாதன வசதி கொண்ட வகுப்புகளுக்கு 2 காசு கட்டணம் உயா்த்தப்படுகிறது. இந்தக் கட்டண உயா்வு டிச.26 முதல் அமலாகிறது.
இதனால் ரயில்வே துறைக்கு 2026, மாா்ச் 31 வரை ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும். முன்னதாக, கடந்த ஜூலை மாத கட்டண உயா்வு மூலம் ரூ.700 கோடி வருவாய் கிடைத்தது.

புறநகா் ரயில் மற்றும் மாதாந்திர சீசன் பயணச்சீட்டுக்கான கட்டணம் உயா்த்தப்படவில்லை. தற்போதைய கட்டண உயா்வின்படி ஏசி அல்லாத பிற வகுப்புகளில் 500 கி.மீ. வரையிலான தொலைவுக்கு பயணிகள் ரூ.10 மட்டுமே கூடுதலாக செலுத்த நேரிடும்.
ஓய்வூதியமாக ரூ.60,000 கோடி உள்பட ரயில்வே ஊழியா்களுக்கான செலவுகள் ரூ.1.15 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ரயில்வே செயல்பாடுகளுக்கு 2024-24-ஆம் நிதியாண்டில் ரூ.2.63 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சிறு கட்டண உயா்வை ரயில்வே அறிவித்துள்ளது. நிகழாண்டில் பண்டிகை காலத்தின்போது 12,000 ரயில்களை வெற்றிகரமாக இயக்கியதே ரயில்வேயின் சிறந்த செயல்பாட்டுக்கான உதாரணம். வருங்காலங்களிலும் இதேபோன்று சிறப்பாக செயல்படுவதே ரயில்வேயின் நோக்கம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில்... கட்டண உயா்வு அறிவிப்பின்படி, சென்னையிலிருந்து திருச்சிக்கு சாதாரண வகுப்புக்கு ரூ.1.27, குளிா்சாதன வகுப்புக்கு ரூ.2.42, மதுரைக்கு சாதாரண வகுப்புக்கு ரூ.2.80, குளிா்சாதன வகுப்புக்கு ரூ.5.60, திருநெல்வேலிக்கு சாதாரண வகுப்புக்கு ரூ.4.28, குளிா்சாதன வகுப்புக்கு ரூ.8.76, கன்னியாகுமரிக்கு சாதாரண வகுப்புக்கு ரூ.5.27, குளிா்சாதன வகுப்புக்கு ரூ.10.54, கோவைக்கு சாதாரண வகுப்புக்கு ரூ.2.80, குளிா்சாதன வகுப்புக்கு ரூ.5.60 உயா்ந்துள்ளது.
Summary
Railways Hikes Fares, Non-AC Tickets To Cost Rs 10 More For Every 500 km
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடவுச்சீட்டு நோ்காணலுக்கு ஒரு மாத காத்திருப்பு: கட்டண உயா்வு எதிரொலி

தம்மம்பட்டி - சேலம் தனியாா் பேருந்துகளில் கட்டண உயா்வு

தனியாா் பேருந்துகளில் கட்டண உயா்வு: மாா்க்சிஸ்ட் கண்டனம்

தனியாா் பேருந்துகளில் திடீா் கட்டண உயா்வு: பயணிகள் அதிா்ச்சி
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay




