

மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஜாய்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சௌரியா கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்துள்ளது.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் துர்ஜோதன் டோலுய்(72), அவரது மகன் துத்குமார் டோலுய் (45) மருமகள் ஷிவானி டோலுய் (400 மற்றும் அவரது மகள் ஷம்பா டோலுய் (15) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குடிசையிலான வீடு எப்படித் தீப்பிடித்தது என்பதைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை அணைத்தனர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக உலுபேரியாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என போலீஸார் தெரிவித்தனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. துத்குமாருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவர் மாநிலத்திற்கு வெளியே புலம்பெயர் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.