நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

லே மலைப்பகுதியில் பிவிஆர் ஐநாக்ஸ் செய்த சாதனை!

ஜம்மு-காஷ்மீரின் லே பகுதியில் முதல்முறையாக திரைப்பட வளாகம் (மல்டிபிளக்ஸ்) அமைக்கப்பட்டுள்ளது.

பிவிஆர் ஐநாக்ஸ் - கோப்புப் படம்

Published On :

ஜம்மு-காஷ்மீரின் லே பகுதியில் முதல்முறையாக திரைப்பட வளாகம் (மல்டிபிளக்ஸ்) அமைக்கப்பட்டுள்ளது. பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் இதனைக் கட்டியுள்ளது.

பல திரைகளைக் கொண்ட அரங்குகள், திரைப்பட வளாகங்களாக மாறி வருகின்றன. தற்போது பெரும்பாலும் திரைப்பட வளாகங்களாக மாறியுள்ள நிலையில், லடாக்கில் முதல் திரைப்பட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் லே - மணாலி சாலையில் அமைந்துள்ள சபூ பகுதியில் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் லே மலைப்பகுதியின் முதல் திரைப்பட வளாகத்தை அமைத்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 11,500 அடி உயரத்தில் இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

டோல்பி 7.1 அல்ட்ரா சவுன்ட், முப்பரிமாண காட்சிகள் கொண்ட திரைப்படங்களையும் (3டி) திரையிடும் வகையில் இரண்டு திரைகள் (ஸ்கிரீன்கள்) அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பேசிய பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அயஜ் பிஜிலி கூறியதாவது, ''லே பகுதியில் முதல் மல்டிபிளக்ஸ் கட்டியுள்ளது உண்மையாகவே பெருமைமிகுந்த தருணம். இதன்மூலம் பார்வையாளர்களை எங்கிருந்தாலும் கவர முடியும் என்ற எங்கள்

நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11,500 அடி உயரத்தில் மல்டிபிளக்ஸ் திறந்துள்ளது எங்கள் உறுதித்தன்மையை பிரதிபலிக்கிறது. கம்பீரமான மலைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள இந்த மல்டிபிளக்ஸ் பிவிஆர் ஐநாக்ஸ் பயணத்தில் குறிப்பிடத்தக்கதாக அமையும்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

PVR INOX opens first multiplex in Leh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.