தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

பிரியங்காவை பிரதமராக்குங்கள்! காங்கிரஸுக்குள் எழுந்த முதல் குரல்!

பிரியங்கா காந்தியைப் பிரதமராக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி குரலெழுப்பியுள்ளார்.

பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி - ANI

Published On :23 டிசம்பர் 2025, 2:26 pm IST

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியைப் பிரதமராக்கினால், அவரின் பாட்டியைப் போல் செயல்படுவார் என்று காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினராக ஹிந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து பிரியங்கா காந்தி கடுமையாகப் பேசவில்லை என்று பாஜக விமர்சித்திருந்தது.

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் தெரிவித்ததாவது:

“பிரியங்கா காந்தி என்ன பிரதமரா? அவரைப் பிரதமராக்கிப் பாருங்கள், இந்திரா காந்தியைப் போன்று எப்படி பதிலடி கொடுப்பார் என்று. அவர் பிரியங்கா காந்தி. பெயருக்குப் பின்னால் காந்தி என்ற பெயர் இருக்கிறது. அவர் இந்திராவின் பேத்தி.

இந்திரா காந்தி பாகிஸ்தானுக்கு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை. பிரியங்காவைப் பிரதமராக்கினால் அவர் கொடுக்கும் பதிலடிக்குப் பிறகு, அப்படிச் செய்ய துணிச்சல் வராது.” எனத் தெரிவித்தார்.

இதனை விமர்சித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா தெரிவித்ததாவது:

“காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத், தனக்கு இனி ராகுல் மீது நம்பிக்கை இல்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். ராகுலுக்கு பதில் பிரியங்காவைக் கொண்டு வாருங்கள் என்பதே அவரின் கோரிக்கை.

அவர் பிரியங்கா காந்தியைப் பிரதமராக்கப் பணியாற்ற விரும்புகிறார். இதற்கு ராபர்ட் வதேராவும் இசைவு காட்டியுள்ளார். இதன்பொருள், மக்களின் ஆதரவு மட்டுமின்றி, கட்சியினர் மற்றும் குடும்பத்தினரின் அதரவையும் ராகுல் இழந்துவிட்டார்.

சில நாள்களுக்கு முன்னதாக, ஒடிஸா காங்கிரஸ் தலைவர் முகமது மோகிம் என்பவர், ராகுல் மற்றும் கார்கேவை தலைமைப் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு, பிரியங்காவை அப்பதவியில் ஏற்ற வேண்டும் எனக் கூறினார். அவர் உடனடியாகக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ராகுல் காந்தி மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை என்பது இடைவிடத் தெளிவாகத் தெரியாது.” என்று விமர்சித்துள்ளார்.

Summary

Make Priyanka Gandhi the Prime Minister: voice raised within the Congress party!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.