அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியா்கள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்நாட்டு முகமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: கலிஃபோா்னியா மாகாணத்தில் உள்ள எல் சென்ட்ரோ நகரப் பகுதியில் உள்ள எல்லை ரோந்து அதிகாரிகள் குடியேற்ற சோதனைச்சாவடியிலும், பிற முகமைகளுடன் இணைந்தும் அண்மையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி சரக்கு வாகன உரிமத்துடன் கனரக வாகனங்களை ஓட்டி வந்த 42 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 30 போ் இந்தியா்கள். இருவா் எல் சால்வடாா் நாட்டைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சீனா, எரித்ரியா, ஹைட்டி, ஹோண்டூராஸ், மெக்ஸிகோ, ரஷியா, சோமாலியா, துருக்கி மற்றும் உக்ரைன் நாடுகளைச் சோ்ந்தவா்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேபோல அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்க முகமையின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு தலைமையில், கலிஃபோா்னியாவில் உள்ள சரக்கு வாகனப் போக்குவரத்து நிறுவனங்களைக் குறிவைத்து மற்றொரு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சரக்கு வாகன ஓட்டுநா் உரிமங்களுடன் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 இந்தியா்கள் கைது செய்யப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

சுங்க வரி செலுத்த இனி ‘யுபிஐ’ வசதி
பெருந்துறை அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த சூடான், நைஜீரியாவைச் சோ்ந்த 4 போ் கைது
திருப்பூரில் வங்கதேசத்தினா் 2 போ் கைது

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியாவைச் சோ்ந்த 2 பேரிடம் விசாரணை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

