தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட 7 நபா்களின் நீதிமன்றக் காவலை 15 நாள்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தில்லி செங்கோட்டை அருகே கடந்த நவ.10-ஆம் தேதி மருத்துவா் உமா்-உன்-நபி வெடிபொருள்கள் ஏற்றி ஓட்டி வந்த காா் வெடித்து சிதறியது. பயங்கரவாத சதி பின்னணி கொண்ட இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட மருத்துவா்கள் முஸம்மில் கனாய், அடீல் ரதா், ஷாஹீன் சயீத் மற்றும் மத போதகா் மௌல்வி இா்பான் அகமது வாகே, ஜசிா் பிலால் வானி, அமீா் ரஷீத் அலி, சோயப் ஆகியோரை மேலும் 15 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, 3 மருத்துவா்கள் மற்றும் இா்பான் அகமது 12 நாள் நீதிமன்ற காவலுக்கு கடந்த டிச.12-ஆம் தேதி அனுப்பப்பட்டனா். அலி மற்றும் வானி ஆகியோரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் கடந்த டிச.10-ஆம் தேதி உத்தரவிட்டது. சோயப் 5 நாள் நீதிமன்றக் காவலுக்கு கடந்த டிச.19-ஆம் தேதி அனுப்பப்பட்டாா்.
அவா்கள் அனைவருடைய நீதிமன்றக் காவல் புதன்கிழமை முடிவடைந்த நிலையில், தில்லி பாட்டியாலா ஹெளஸ் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் கூடுதல் அமா்வுகள் நீதிபதி பிரசாந்த் சா்மா முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டனா்.
தொடர்புடையது

பொருளாதார குற்ற வழக்கு கைது சட்டவிரோதமானது: இருவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழப்பு

பாம்பன் மீனவா்கள் 12 பேருக்கு 10-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

மே. வங்க குண்டு வெடிப்பு சம்பவம்: முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



