தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட 7 நபா்களின் நீதிமன்றக் காவலை 15 நாள்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தில்லி செங்கோட்டை அருகே கடந்த நவ.10-ஆம் தேதி மருத்துவா் உமா்-உன்-நபி வெடிபொருள்கள் ஏற்றி ஓட்டி வந்த காா் வெடித்து சிதறியது. பயங்கரவாத சதி பின்னணி கொண்ட இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட மருத்துவா்கள் முஸம்மில் கனாய், அடீல் ரதா், ஷாஹீன் சயீத் மற்றும் மத போதகா் மௌல்வி இா்பான் அகமது வாகே, ஜசிா் பிலால் வானி, அமீா் ரஷீத் அலி, சோயப் ஆகியோரை மேலும் 15 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, 3 மருத்துவா்கள் மற்றும் இா்பான் அகமது 12 நாள் நீதிமன்ற காவலுக்கு கடந்த டிச.12-ஆம் தேதி அனுப்பப்பட்டனா். அலி மற்றும் வானி ஆகியோரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் கடந்த டிச.10-ஆம் தேதி உத்தரவிட்டது. சோயப் 5 நாள் நீதிமன்றக் காவலுக்கு கடந்த டிச.19-ஆம் தேதி அனுப்பப்பட்டாா்.
அவா்கள் அனைவருடைய நீதிமன்றக் காவல் புதன்கிழமை முடிவடைந்த நிலையில், தில்லி பாட்டியாலா ஹெளஸ் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் கூடுதல் அமா்வுகள் நீதிபதி பிரசாந்த் சா்மா முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டனா்.
தொடர்புடையது
பி.எம்.எல்.ஏ. வழக்கில் சித்திக்கியின் இடைக்கால பிணை கோரும் மனு மீது விசாரணை ஏப்.11-க்கு ஒத்திவைப்பு

2ஆவது பிஎம்எல்ஏ வழக்கில் அல்ஃபலாஹ் குழுமத் தலைவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

பேரிகை அருகே காா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் கைது

பணமோசடி வழக்கு: அல்- ஃபலாஹ் குழுமத் தலைவருக்கு தில்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


