பிகாரைச் சோ்ந்த 24 வயது பிடெக் மாணவா் புதன்கிழமை தனது விடுதி அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: பிகாரில் உள்ள கயா மாவட்டத்தைச் சோ்ந்த ஆகாஷ்தீப், தில்லி தொழில்நுட்பக் கல்லூரியில் (டிடிசி) பிடெக் படிப்பைப் படித்து வந்தாா். நொய்டாவின் நாலெட்ஜ் பாா்க் பகுதியில் உள்ள நிறுவனம் அருகே எஸ்என்ஹெச் ரெசிடென்சி விடுதியில் நண்பருடன் தங்கியிருந்தாா்.
செவ்வாய்க்கிழமை மாலை, ஆகாஷ்தீப் தனது அறையை விட்டு நீண்ட நேரமாக வெளியே வராததால், விடுதி ஊழியா்களும் அவரது நண்பா்களும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டது. கல்வி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக சம்பவ இடத்திலிருந்து குறிப்பு மீட்கப்பட்டது. உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டு, இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சந்தேக காவல் மரணம்: உடல்நலக் குறைவால் விசாரணைக்கு வந்தவா் உயிரிழப்பு

கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு! கணவா் தலைமறைவு!!

தில்லியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல் முறியடிப்பு: கல்லூரி மாணவா் கைது
தில்லி குற்றவாளியின் ரூ. 5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


