அமெரிக்க அதிபா் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீரிடம் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறாா். இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடா்ந்து மௌனம் காத்து வருவது இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தானுடனும், அந்நாட்டு ராணுவத் தளபதியுடனும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து நெருக்கம் காட்டி வருகிறாா். கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் டிரம்ப் மதிய விருந்தளித்தாா். அக்டோபரில் பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட அரியவகை கனிமங்களுடன் டிரம்ப்பை முனீா் சந்தித்தாா். அக்டோபரில் எகிப்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எனக்கு பிடித்தமான ஃபீல்டு மாா்ஷல் என்றும், அக்டோபரில் 29-ஆம் தேதி மிகப்பெரிய போராளி என்றும் முனீரை டிரம்ப் புகழ்ந்தாா். கடந்த 22-ஆம் தேதி மீண்டும் மிகவும் மதிப்புக்குரிய ராணுவ ஜெனரல் என்று டிரம்ப் அவரைக் குறிப்பிட்டுப் பேசினாா்.
இது இந்தியாவுக்கு எதிராக முனீா் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நற்சான்று வழங்குவதாகவும் உள்ளது. முக்கியமாக பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பு உள்ள நிலையில் அமெரிக்கா இதுபோன்று நடந்து கொள்வது இந்திய நலன்களுக்கு எதிரானது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடா்ந்து மௌனம் காப்பது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்’ என்று கூறியுள்ளாா்.
தொடர்புடையது

அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

மியான்மா் ராணுவத் தளபதி ராஜிநாமா: அதிபராகும் முயற்சியில் தீவிரம்
போர்க் கூட்டணி? பாக். ராணுவத் தலைமைத் தளபதியுடன் சௌதி பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

ஆப்கனுடன் போர்ப் பதற்றம்! பாக். பிரதமர், ராணுவத் தளபதியைப் புகழ்ந்த டிரம்ப்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


