நிஃப்டி 23,450-க்கு கீழ் சரிவு: 3 மாதக் குறைந்தபட்சத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 813 புள்ளிகள் வீழ்ச்சி!!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு! பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலி!!தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடுநார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு! ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்பு!சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

ரூ. 5-க்கு நாள்தோறும் சத்தான சாப்பாடு! தில்லி அரசு அறிவிப்பு!

தில்லியில் நாள்தோறும் ரூ. 5-க்கு சத்தான உணவு வழங்கும் தி அடல் கேன்டீன் திட்டத்தை முதல்வர் ரேகா குப்தா தொடக்கி வைத்தார்.

அடல் உணவகத்தில் உணருந்திய தில்லி முதல்வர் ரேகா குப்தா - X | Rekha Gupta

Published On :

தில்லியில் ரூ. 5-க்கு சத்தான உணவு வழங்கும் தி அடல் கேன்டீன் திட்டத்தை மாநில முதல்வர் ரேகா குப்தா தொடக்கி வைத்தார்.

தில்லியில் நாள்தோறும் ரூ. 5-க்கு சத்தான உணவை வழங்கும்வகையிலும், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயை போற்றும்வகையிலும், தி அடல் கேன்டீன் திட்டத்தை ரேகா குப்தா தொடக்கி வைத்தார்.

திட்டத்தைத் தொடக்கிவைத்த ரேகா குப்தா, இந்தத் திட்டத்தின் மூலம் தொழிலாளிகள், ஏழைகள் மற்றும் தேவைப்படுவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். இந்தத் திட்டத்துக்காக ரூ. 104.24 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் சுமார் 700 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

மாநிலம் முழுவதும் இருக்கும் ஒவ்வொரு அடல் உணவகத்திலும் நாள்தோறும் சுமார் 1,000 பேருக்கு உணவு வழங்கப்படும். மேலும், மாநிலத்தில் சுமார் 100 அடல் உணவகங்கள் அமைக்கப்பட்டு. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்போட்டோர் பயனடைவர்.

இவற்றில் 45 உணவகங்கள் இன்றுமுதலே திறக்கப்பட்டன. மீதமுள்ள 55 உணவகங்களும் அடுத்த 15 முதல் 20 நாள்களுக்குள் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடல் உணவகத்தில் உணருந்திய தில்லி முதல்வர் ரேகா குப்தா

அடல் உணவகத்தில் உணருந்திய தில்லி முதல்வர் ரேகா குப்தா

ஒவ்வொரு அடல் உணவகத்திலும் ஒரு நாளைக்கு இரு முறை உணவு வழங்கப்படும். காலை 11.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையில் மதிய உணவும், மாலை 6.30 மணிமுதல் இரவு 9 மணிவரையில் இரவு உணவும் வழங்கப்படும்.

பருப்பு, அரிசி, ரொட்டி, காய்கறிகள் உள்ளிட்ட சத்தான பொருள்கள் அடங்கிய மெனு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் உணவும் சுமார் 600 கிராம் எடையுடன், சராசரியாக 700 முதல் 800 கலோரிகளையும், 20 முதல் 25 கிராம் புரதத்தையும் வழங்குவதாக இருக்கும்.

Summary

Delhi CM Rekha Gupta inaugurates Atal Canteens, offering Rs 5 meals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.