தில்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை!

தில்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை...
PM Modi attends Christmas morning service at Cathedral Church of the Redemption in Delhi
தில்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை..X / PM Modi
Updated on
1 min read

தில்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை தில்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் மக்களுடன் கலந்துகொண்டார்.

கிறிஸ்துமஸ் பாடல்கள், பிரதமர் மோடி வருகையையொட்டி அவருக்கான பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் அங்குள்ள அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "தில்லியில் உள்ள பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில் கலந்துகொண்டேன். அன்பு, அமைதி மற்றும் கருணை என காலத்தால் அழியாத செய்திகளை இந்த கூட்டம் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸின் உணர்வு நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

PM Modi attends Christmas morning service at Cathedral Church of the Redemption in Delhi

PM Modi attends Christmas morning service at Cathedral Church of the Redemption in Delhi
கிறிஸ்துமஸ் ஏற்பாடுகளை அடித்து நொறுக்கிய இந்து அமைப்பினர்! அசாமில் பதற்றம்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com