சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

திரிபுரா பேரவைத் தலைவர் காலமானார்!

திரிபுரா பேரவைத் தலைவர் பிஸ்வா பந்து சென் வெள்ளிக்கிழமை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

News image

பிஸ்வா பந்து சென்

(Photo | PTI, FILE)

Updated On :26 டிசம்பர் 2025, 11:04 am

தினமணி செய்திச் சேவை

திரிபுரா பேரவைத் தலைவர் பிஸ்வா பந்து சென் வெள்ளிக்கிழமை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

திரிபுரா பேரவைத் தலைவர் பிஸ்வா பந்து சென் பெருமூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. சென்னுக்கு வயது 72. அவர், வடக்கு திரிபுராவில் உள்ள தர்மநகர் பேரவைத் தொகுதியின் எம்.எல்.ஏ. ஆவார். மறைந்த சென்னுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

பேரவைத் தலைவர் பிஸ்வா பந்து சென் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததோடு, திரிபுராவின் முன்னேற்றத்தை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை நினைவு கூர்ந்தார்.

சென்னின் உடல் சனிக்கிழமை திரிபுராவுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் கூறினர். பேரவைத் தலைவர் சென்னின் மறைவுக்கு திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.