விபி ஜி ராம் ஜி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படவுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும், வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜனவரி 5 முதல் நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செயற்குழு - பிடிஐ
இதுகுறித்து, செய்தியாளர்களுடன் கார்கே பேசுகையில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டதால், பொதுமக்களின் கோபம் அதிகரித்துள்ளது. இதன் விளைவுகளை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
கலந்தாலோசிக்காமல், எடுக்கப்பட்ட ஒருதலைபட்சமான இந்தத் திட்டத்துக்கு, இப்போது மத்திய, மாநில அரசுகள் இணைந்து 60:40 விகிதத்தில் நிதியளிக்க வேண்டியுள்ளது. இதனால், மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.
மேலும், சிறப்பு தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை மட்டுப்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட சதி என்றும் கார்கே விமர்சித்தார்.
Summary
Congress to launch ‘MGNREGA Bachao Abhiyan’ from January 5
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் எத்தனை துணை முதல்வர்கள்? கார்கே பதில்!

நீட் வினாத்தாள் கசிவு: அரசு கவனம் செலுத்தாதது ஏன்? - காங்கிரஸ்

மல்லிகார்ஜுன கார்கே முதல்வரானால் வரவேற்போம்: கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்

மகளிர் இடஒதுக்கீடு மசோவை ஆதரிக்கிறோம்; ஆனால்...: கார்கே
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



