கேரளத்தில் நகராட்சித் தலைவராக முதன்முறையாக 21 வயது இளம்பெண் தியா பினு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தின் பாலா நகராட்சியில் 21 வயதேயான இளங்கலை பொருளாதாரத்தில் பட்டம்பெற்ற தியா பினு சுயேட்சையாகப் போட்டியிட்டார்.
தொடர்ந்து, யுடிஎஃப் ஆதவுடன் நகராட்சித் தலைவராக தியா பானு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், மிக இளம் வயது நகராட்சித் தலைவர் என்ற பெருமையையும் தியா பினு பெற்றார்.

தியாவின் மாமா பிஜு புலிக்ககண்டம் மற்றும் தந்தை பினு புலிக்ககண்டம் - ENS
நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தியா பேசுகையில், "இந்த உயரிய பொறுப்பை நான் மதிக்கிறேன். பாலா நகராட்சியின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக்காக என்னால் முடிந்தவரையில் பாடுபடுவேன்.
எனது 25 சக கவுன்சிலர்களின் முழு மனதான ஆதரவை எதிர்பார்க்கிறேன். நகராட்சியை வழிநடத்துவதில் அவர்களின் ஆலோசனையை நான் மதிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
தியாவின் தந்தை மற்றும் மாமாவும் சுயேட்சையாகப் போட்டியிட்டு, தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
கேரளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அதிக இடங்களில் வெற்றி பெற்றநிலையில், ஆளுங்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) பெரும் பின்னடைவை பெற்றது.
Summary
21 Y/O Diya Binu,Kerala’s Pala as India’s youngest municipal chairperson promises development
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹா்ஷ் மல்ஹோத்ராவுக்கு ரேகா குப்தா வாழ்த்து

மூத்தோா் தடகள சங்க மாவட்ட தலைவராக ப. காா்த்தி வேல்மாறன் தோ்வு

பேரவைத் தலைவராக ஜே.சி.டி. பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் தேர்வு!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |




