மத்தியப் பிரதேசத்தில் இருசக்கர வாகனத்தில் டெட்டனேட்டர்கள் எடுத்துச் சென்றபோது வெடித்ததில் இளைஞர் பலியானார்.
மத்தியப் பிரதேசத்தின் சேஹோர் மாவட்டத்தில், இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை டெட்டனேட்டர்கள் எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது அது வெடித்ததில் அந்த இளைஞர் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.
ராம்நகர் பகுதியில் இருசக்கர வாகனம் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுக்ராம் பாரேலா(20) என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர், கிணறுகளில் வெடி வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் வேலைக்காக அதிக அளவில் டெட்டனேட்டர்களை எடுத்துச் சென்றபோது, அது வெடித்ததாக துணைக் காவல் கண்காணிப்பாளர் ரோஷன் ஜெயின் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
Summary
A 20-year-old rider was killed when his motorcycle exploded in Madhya Pradesh's Sehore district on Sunday, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டுசென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல்

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


