பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கடும் பனிமூட்டம்: தில்லியில் 128 விமானங்கள் ரத்து!

தில்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

News image

கோப்புப்படம்

Updated On :29 டிசம்பர் 2025, 12:13 pm IST

தில்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தலைநகர் தில்லியில் கடந்த சில நாள்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக விமானங்கள் ரத்து செய்வது, மாற்றுப் பாதைக்குத் திருப்பி விடுதல் போன்றவை நிகழ்ந்து வருகின்றது.

அதன்படி, இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் காரணமாக தில்லி விமான நிலையத்தில் குறைந்தது 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 8 விமானங்கள் மாற்றுப் பாதைக்குத் திருப்பி விடப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.

கடும் பனிமூட்டம் காரணமாகப் புறப்படவேண்டிய 64 விமானங்களும், வருகை தரவேண்டிய 64 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தில்லி விமான நிலையத்தின் எக்ஸ் பதிவில்,

பனிமூட்டம் காரணமாக காட்சித்திறன் குறைந்திருந்தது. தற்போது அது மேம்பட்டு வருவதாகவும், இருப்பினும் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

விமானங்களைக் கண்காணிக்கும் இணையதளமான Flightradar24.com-இல் உள்ள தகவலின்படி, கிட்டத்தட்ட 200 விமானங்கள் தாமதமாகியுள்ளன. ஒவ்வொரு விமானமும் புறப்படும் நேரத்தில் 24 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தில்லி மற்றும் வட இந்தியாவின் பல விமான நிலையங்களில் பனிமூட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் காட்சித்திறன் குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக விமானப் போக்குவரத்து இயல்பை விடத் தாமதங்கள் ஏற்படுவதாக இண்டிகோ நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.

தில்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் (DIAL), தேசிய தலைநகரின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை (IGIA) இயக்குகிறது, இது தினசரி சுமார் 1,300 விமானப் போக்குவரத்தைக் கையாள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

At least 128 flights were cancelled, eight got diverted, and nearly 200 services were delayed at the Delhi airport due to dense fog on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.