மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கேரள இசை நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 6 பேருக்கு மூச்சுத் திணறல்!

இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 90 நிமிடங்கள் தாமதமாகவே நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

News image

இசை நிகழ்ச்சியில் திரண்ட கூட்டம் - படம் | இன்ஸ்டாகிராம்

Updated On :30 டிசம்பர் 2025, 7:20 pm IST

கேரளத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அதிகப்படியான கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அசெளகரியம் மற்றும் உடல்நலக் குறைவால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் அமைந்துள்ள பேக்கல் கடற்கரை கோட்டைப் பகுதியில் டிசம்பர் 29 ஆம் தேதி இரவு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி இரவு 8 மணிக்குத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 90 நிமிடங்கள் தாமதமாகவே நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இதனால், பல மணிநேரமாக காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள், மேடையை நோக்கி நகர்ந்துள்ளனர்.

அதிகப்படியாக கூட்டம் மேடை அருகே சூழ்ந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய பேக்கல் காவல் நிலைய அதிகாரி, கூட்ட நெரிசலில் சிக்கியவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

இதனிடையே, இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள கொயிலாண்டி பகுதியில் இருந்து வந்த இளைஞர், பேக்கல் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அவரை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேக்கல் விடுதி மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து கேரள சுற்றுலாத் துறை சார்பில் டிசம்பர் 20 முதல் 31 வரை பேக்கல் சர்வதேச கடற்கரை திருவிழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Six Suffer Suffocation After Crowd Rush At Kerala's Bekal Beach Music Festival

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.