தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பிராணப் பிரதிஷ்டை இரண்டாமாண்டு விழா: ராஜ்நாத், யோகி ஆதித்யநாத் பங்கேற்பு!

அயோத்தியில் இரண்டாமாண்டு விழா பற்றி..

News image

பிராணப் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத்

Updated On :31 டிசம்பர் 2025, 12:42 pm IST

அயோத்தியில் பிராணப் பிரதிஷ்டையின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, ராமர் கோயிலில் நடைபெறும் சடங்குகளில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டாமாண்டு விழாவையடுத்து கோயில் வளாகத்தில் மத சடங்குகள் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுவரும் கோயிலில் கடந்த 2024 ஜனவரி 22-ம் தேதி மூலவர் பால ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில், ிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டாமாண்டு நிறைவு விழாவையடுத்து இன்று காலை கணபதி பூஜை மற்றும் மண்டல பூஜையுடன் சடங்குகள் தொடங்கியதாகக் கோயில் அறங்காவலர் அனில் மிஸ்ரா கூறினார்.

இதுதொடர்பாக அறங்காவலர் அனில் மிஸ்ரா கூறுகையில்,

ராமர் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டாமாண்டு விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஸ்ரீராமம் கோயிலில் நடைபெறும் பிராண பிரதிஷ்டா-துவாதசி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ராஜ்நாத் சிங் முன்னிலையில் ஸ்ரீ மூல ராமருக்குச் சடங்குகள் அபிஷேகம் செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து ஆரத்தி பூஜையும் நடைபெற்றது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கோயில் வளாகத்தின் வெளியேறும் வாயிலுக்கு அருகிலுள்ள அங்கத் திலாவில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுவார்கள் என்று மிஸ்ரா கூறினார்.

இந்த விழாவில் கலந்துகொள்ள அயோத்தியைச் சேர்ந்த சுமார் 1,200 துறவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

எக்ஸ் சமூக வலைத்தளத்தில் யோகி ஆதித்யநாத் பதிவில்,

இந்த நிகழ்வை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். ராம் லல்லா சிலையின் பிராணப் பிரதிஷ்டையின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்கத் தருணத்தை அயோத்தி கண்டுள்ளது.

ஸ்ரீ ராமர் ஜென்மபூமியில் ஸ்ரீ ராமர் நிறுவப்பட்டது பல நூற்றாண்டுக்கால போராட்டங்கள் மற்றும் துன்பங்களின் முடிவைக் குறிக்கிறது. இந்தத் தருணம் பல தசாப்த கால பக்தியின் உச்சம், துறவிகளின் ஆசிர்வாதம் மற்றும் 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பு. இந்த நேரத்தில் ராமர் பக்தர்கள் ஒவ்வொருவரும் மனநிறைவுடன் இருப்பதாக அவர் கூறினார்.

கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள ஏழு கோயில்களில் ஒன்றான அன்னபூர்ணா கோயிலில் ராஜ்நாத் சிங் கொடியேற்றுவார் என்று அயோத்தி மாவட்ட ஆட்சியர் நிகில் திக்காராம் ஃபுண்டே முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.