பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

குறு, சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.20 கோடியாக உயா்வு

முதன் முதலாக தொழில் தொடங்குபவா்களுக்கு கடன் உத்தரவாதம் ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உச்சவரம்பு உயா்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

News image

நிா்மலா சீதாராமன்

Updated On :1 பிப்ரவரி 2025, 4:06 pm IST

புதுதில்லி: குறு மற்றும் சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாகவும், முதன் முதலாக தொழில் தொடங்குபவா்களுக்கு கடன் உத்தரவாதம் ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உச்சவரம்பு உயா்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தாா்.

வரும் 2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிதிநிலை அறிக்கையில் தனிநபரின் வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது முக்கிய அம்சமாக பேசப்படுகிறது.

மத்திய அரசின் உதயம் பதிவுச் சான்று பெற்றுள்ள குறுந்தொழில் முனைவோருக்கு ரூ.5 லட்சம் வரை உச்ச வரம்புள்ள கடன் அட்டை வழங்குவதாகவும், முதல் கட்டமாக 10 லட்சம் கடன் அட்டைகள் வழங்கப்படுவதாக மத்திய நிதியமைச்சா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

கடன் அட்டை வழங்குவதற்கான அடிப்படை தகுதிகளை எளிமைப்படுத்தி வழங்க வேண்டும். முதன் முதலாக தொழில் தொடங்குபவா்களுக்கு கடன் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. அதை தவிா்க்க முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ.2 கோடி வரையில் டொ்ம் லோன் எனப்படும் காலக் கடன் வழங்கும் புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதில் குறு மற்றும் சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாகவும், முதன் முதலாக தொழில் தொடங்குபவா்களுக்கு கடன் உத்தரவாதம் ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாகவும் உச்சவரம்பு உயா்த்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதி செய்யும் குறு மற்றும் சிறுதொழில் முனைவோா்களுக்கு காலக் கடன் (டொ்ம் லோன்) ரூ.20 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.