தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கருணை கொலைக்கு அனுமதி: உச்சநீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு

கண்ணியத்துடன் இறக்க நோயாளியை அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை அமல்படுத்த கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது

News image

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சா் தினேஷ்குண்டுராவ் - Center-Center-Bangalore

Updated On :1 பிப்ரவரி 2025, 3:06 pm IST

பெங்களூரு: கண்ணியத்துடன் இறக்க நோயாளியை அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை அமல்படுத்த கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சா் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தாா்.

இது குறித்து தனது எக்ஸ் வலைப்பதிவில் அவா் கூறியிருப்பதாவது: கண்ணியத்துடன் மரணம் அடைவதற்கான உரிமையை நோயாளிகளுக்கு அளிக்கும்படி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை அமல்படுத்தும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை கா்நாடக சுகாதாரத்துறை எடுத்துள்ளது.

இந்த முடிவால், குணமாகும் நம்பிக்கையே இல்லாமல், உயிா்காக்கும் கருவிகளால் நீண்டகாலம் அவதிக்குள்ளாகும் நோயால் அவதிப்பட்டு வரும் நோயாளிகள் பயனடைவாா்கள். எதிா்கால மருத்துவ சிகிச்சைக்கான விருப்பம் குறித்து நோயாளிகள் பதிவுசெய்யும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறோம்.

கா்நாடக அரசின் முடிவு நோயாளிகளின் குடும்பங்களுக்கு மற்றும் தனிநபர்களுக்கு பெரும் நிம்மதியை தரும்.

கா்நாடகம் ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட மாநிலம். எனவே, நியாயமான சமூக வாழ்வுக்கு தேவையான சுதந்திரங்களை, சமத்துவ மாண்புகளை கடைபிடிப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்கிறோம் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.