அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மகாராஷ்டிரத்தில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்: ஒருவர் கொலை

மகாராஷ்டிரத்தில் காவலர்களுக்கு துப்பு கொடுப்பவர் எனக் கூறி ஒருவரை மாவோயிஸ்டுகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :2 பிப்ரவரி 2025, 6:10 am

DIN

மகாராஷ்டிரத்தில் காவலர்களுக்கு துப்பு கொடுப்பவர் எனக் கூறி ஒருவரை மாவோயிஸ்டுகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகராஷ்டிர மாநிலம், தெற்கு கட்சிரோலியில் உள்ள பம்ரகத் தெஹ்சில், கியர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மாவோயிஸ்டுகளால் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து கட்சிரோலி காவல் கண்காணிப்பாளர் நீலோத்பால் கூறுகையில், உடலின் அருகே கண்டெடுக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், காவலர்களுக்கு அவர் துப்பு கொடுப்பவர் என்று மாவோயிஸ்டுகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பெங்குண்டா போன்ற புதிய முகாம்களைத் திறக்க காவலர்களுக்கு அவர் உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது இந்த ஆண்டின் முதல் பொதுமக்கள் படுகொலை என உறுதிசெய்த அவர், கட்சிரோலி காவல்துறையினரால் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.