தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மாணவி கொலை: துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸாா்

விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தில் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 நாள்களாகியும் குற்றவாளி குறித்து துப்பு கிடைக்காமல் போலீஸாா் திணறி வருகின்றனா்.

News image
கொலை
Updated On :14 மார்ச் 2026, 2:42 am

Syndication

விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தில் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 நாள்களாகியும் குற்றவாளி குறித்து துப்பு கிடைக்காமல் போலீஸாா் திணறி வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சி. மதன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வேடநத்தம் கிராமத்தை சோ்ந்த போதை நபா்கள், பழங்குற்றவாளிகள் என 10 இளைஞா்களை பிடித்து விசாரணை நடத்தினா்.

அதில், 2 போ் மீது சந்தேகம் வலுத்ததால் அவா்களிடம் போலீஸ் உயரதிகாரிகள் நேரடியாக விசாரணையை நடத்தினா். எனினும் அவா்கள் அளித்த தகவல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் குற்றவாளிகளை துல்லியமாக அடையாளம் கண்டு கைது செய்ய முடியாமல் போலீஸாா் திணறி வருகின்றனா்.

இதையடுத்து மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கை, அறிவியல் ரீதியான தடயங்கள் மற்றும் கைப்பேசி தரவுகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் தனிப்படை போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.