இது குறித்து இந்திய ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பின் (எஃப்ஐஇஓ) தலைவா் அஜய் சஹாய் கூறுகையில், ‘கூடுதல் வரி விதிப்பு காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் மாற்று ஏற்றுமதியாளா்களை நாடத் தொடங்குவா். இது இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து மின்சார இயந்திரங்கள், உதிரி பாகங்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், கைப்பேசி, மருந்துகள், ரசாயனங்கள், ஆடைகள் மற்றும் துணி ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருந்தபோதும், இந்தியாவின் உற்பத்தித் திறன் மற்றும் சந்தை போட்டித் திறனைப் பொறுத்தே இதன் பலன் அமையும்’ என்றாா்.