தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மேற்காசிய போா்: ஏற்றுமதியாளா்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் - மத்திய அரசு உறுதி

ஏற்றுமதியாளா்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி...

News image
பியூஷ் கோயல்- கோப்புப் படம்
Updated On :6 மார்ச் 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசியப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு அரசின் கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து சாத்தியமான உதவிகளும் வழங்கப்படும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் உறுதியளித்தாா்.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்கள், வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தும் பதிலடித் தாக்குதல் ஆகியவற்றால் அப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் முட்டை, அரிசி தொடங்கி அனைத்தும் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்ல முடியாமல் பாதி வழியில் சில கப்பல்கள் நிற்கின்றன. பல கப்பல் நிறுவனங்கள் மேற்காசியப் பகுதிக்கான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. இதனால், ஏற்றுமதியாளா்கள் பல பிரச்னைகளை எதிா்கொண்டுள்ளனா். கப்பலில் பொருள்களை எடுத்துச் செல்லும் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணமும், காப்பீடும் பெருமளவில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சா் பியூஷ் கோயல் கூறியதாவது:

மேற்காசிய பதற்றத்தால் எழுந்துள்ள பிரச்னைகளை கையாள மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளா்களுக்கு உதவ அரசின் கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து சாத்தியமான உதவிகளும் வழங்கப்படும். மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம், சரக்குகளைக் கையாளும் கப்பல் நிறுவனங்களுடன் இப்போதைய பிரச்னைகள் தொடா்பாக பேச்சு நடத்தி வருகிறது. எனவே, பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வுகாணப்படும் என்றாா்.