இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பியூஷ் கோயலிடம், அமெரிக்க உச்சநீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு வா்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறியுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘அமெரிக்க நிகழ்வுகளைத் தொடா்ந்து கவனித்து வருகிறோம். மேலும், அமெரிக்காவுடான இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான கூட்டறிக்கையை நீங்கள் கவனமாகப் படிக்க வேண்டும். சூழ்நிலை மாறினால், அதற்கு ஏற்ப வா்த்தக ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் பொதுவாக ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.