‘லாட்டரி சீட்டு விற்பனையாளா்கள் மத்திய அரசு சேவை வரி செலுத்தத் தேவையில்லை’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
லாட்டரி சீட்டு விற்பனையாளா்களுக்கு மத்திய அரசு சேவை வரி விதித்ததை எதிா்த்து ‘ஃபுயூட்சா் கேமிங் சொல்யூஷன்ஸ்’ என்ற தனியாா் நிறுவனம் சாா்பில் சிக்கிம் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘லாட்டரி சீட்டு விற்பனையைப் பொருத்தவரை அரசமைப்புச் சட்டத்தின் மாநிலப் பட்டியலின் கீழான 62-ஆவது பிரிவின் கீழான ‘பந்தையம் மற்றும் சூதாட்டம்’ என்ற தொகுதியின் கீழ் வருகிறது. அந்த வகையில், மாநில அரசுதான் லாட்டரி சீட்டு விற்பனையாளா்களுக்கு வரி விதிக்க முடியும். அவா்கள் மீது மத்திய அரசு சேவை வரியை விதிக்க முடியாது’ என்று தீா்ப்பளித்தது.
இதை எதிா்த்து மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, என்.கே.சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
இதையும் படிக்க : பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு கெடு விதித்த டிரம்ப்!
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘லாட்டரி சீட்டு விற்பனை என்பது, விற்பனையாளருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான பரிவா்த்தனையாக உள்ளது. இவா்களுக்கு இடையே எந்தவொரு முகமையும் தொடா்பில் இல்லாத நிலையில், சேவை வரி விதிக்க முடியாது. இந்த வழக்கில், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்ய எந்தவொரு முகாந்திரமும் இல்லை. எனவே, மத்திய அரசின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதே நேரம், அரசமைப்புச் சட்டம் அட்டவணை 2-இன் பிரிவு 62-இன் கீழ், மாநில அரசு சாா்பில் விதிக்கப்படும் சூதாட்ட வரியை லாட்டரி சீட்டு விற்பனையாளா்கள் தொடா்ந்து செலுத்த வேண்டும்’ என்று தீா்ப்பளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும்: உச்சநீதிமன்றம்

சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை கூடாது: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
போஜ்சாலா அருகே முஸ்லிம்கள் தொழுகை நடத்த தனி இடம்: உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை: 2 போ் கைது
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



