மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உலகின் ஆறாவது பெரிய ஜவுளி ஏற்றுமதியாளர், இந்தியா: பிரதமர் மோடி

ஜவுளித் துறையில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

News image

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்) - X | Narendra Modi

Updated On :16 பிப்ரவரி 2025, 4:04 pm

ஜவுளித் துறையில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தில்லியில் பாரத் மண்டபத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் தொழில் வளர்ச்சி கவுன்சில்கள் இணைந்து நடத்தும் பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, ``பாரத் டெக்ஸ் இப்போது உலகளாவிய ஒரு மெகா ஜவுளியாக வளர்ந்து வருகிறது. உலகின் ஆறாவது பெரிய ஜவுளி ஏற்றுமதியாளராக நாம் இருக்கிறோம். தொழில்நுட்ப ஜவுளித் துறையில் இந்தியா தனது திறனை பயன்படுத்தி, ஏராளமான வாய்ப்புகள் உருவாக்குகிறது. கடின உழைப்பு மற்றும் நிலையான கொள்கையே நமது வெற்றிக்கு காரணம்.

2025 ஆம் ஆண்டில், பருத்தி சாகுபடி செய்யும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பருத்தி உற்பத்தித் திறன் இயக்கத்தை அரசு அறிவித்தது.

கடந்தாண்டில் இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதிகள் 7 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளன. இந்தியாவில் தற்போது ரூ. 3 லட்சம் கோடியை எட்டியுள்ள ஜவுளி ஏற்றுமதி, 2030 ஆம் ஆண்டில் ரூ. 9 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.