மூத்த தெலுங்கு நடிகையும் தயாரிப்பாளருமான சி.கிருஷ்ணவேணி ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்று திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் மதல ரவி தெரிவித்தார்.
அவளுக்கு 102 வயது. அவர் தனது மகளுடன் வசித்து வந்தார். கிருஷ்ணவேணி வயது தொடர்பான பிரச்னைகளால் காலமானார் என்று மதல ரவி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் பிறந்த கிருஷ்ணவேணி, 1938ஆம் ஆண்டு ‘கச்ச தேவயானி’ திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து அவர் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தனது குடும்பத்திற்கு சொந்தமான ஸ்டுடியோ மூலம் பீஷ்மா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.
‘மன தேசம்’ திரைப்படத்தின் மூலம் முன்னாள் முதல்வரும் நடிகருமான என்.டி.ராமராவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதில் கிருஷ்ணவேணியும் நடித்தார்.
திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2004-ல் ரகுபதி வெங்கையா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதனிடையே கிருஷ்ணவேணியின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா படித்து என்னவாக விரும்பினார் தெரியுமா? அவரே சொன்ன தகவல்...

டாஸ்மாக் வருவாய் இழப்பை ஈடுகட்ட மாற்று வழிகள் ஆராயப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ரேவதி, ராதிகா, ராதா... ர வரிசையில் பெயர் சூட்டிய பாரதிராஜாவின் ஃபார்முலா!







