தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

என்.டி.ராமராவை அறிமுகப்படுத்திய பழம்பெரும் நடிகை காலமானார்

திரையுலகிற்கு என்.டி.ராமராவை அறிமுகப்படுத்திய பழம்பெரும் நடிகை சி.கிருஷ்ணவேணி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

News image

தெலுங்கு நடிகை கிருஷ்ணவேணி.

Updated On :16 பிப்ரவரி 2025, 1:47 pm IST

மூத்த தெலுங்கு நடிகையும் தயாரிப்பாளருமான சி.கிருஷ்ணவேணி ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்று திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் மதல ரவி தெரிவித்தார்.

அவளுக்கு 102 வயது. அவர் தனது மகளுடன் வசித்து வந்தார். கிருஷ்ணவேணி வயது தொடர்பான பிரச்னைகளால் காலமானார் என்று மதல ரவி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் பிறந்த கிருஷ்ணவேணி, 1938ஆம் ஆண்டு ‘கச்ச தேவயானி’ திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து அவர் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தனது குடும்பத்திற்கு சொந்தமான ஸ்டுடியோ மூலம் பீஷ்மா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

‘மன தேசம்’ திரைப்படத்தின் மூலம் முன்னாள் முதல்வரும் நடிகருமான என்.டி.ராமராவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதில் கிருஷ்ணவேணியும் நடித்தார்.

திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2004-ல் ரகுபதி வெங்கையா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதனிடையே கிருஷ்ணவேணியின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.