உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேனீக்கள் கொட்டியதில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
பள்ளியா மாவட்டத்தின் நர்ஹி பகுதியிலுள்ள பைரியா-தம்ஹன்பூரா சாலையில் நேற்று (பிப்.15) மதியம் திடீரென அங்கு வந்த தேனீக்கள் சாலையில் சென்றவர்களை கொட்டித் தாக்கியுள்ளது. அப்போது, அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த இச்சா சௌபே கா புரா கிராமத்தைச் சேர்ந்த ரகுநாத் யாதவ் (வயது 75) என்ற முதியவரை அந்த தேனீக்கள் பலமுறை கொட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், படுகாயமடைந்த அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
மேலும், இந்த தாக்குதலில் நக்ஷத்ரா யாதவ் (70) மற்றும் புரார் யாதவ் (40) ஆகிய இரு கிராமவாசிகளும் படுகாயமடைந்து தற்போது அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், திடீரெனத் தேனீக்கள் நடத்திய தாக்குதல் குறித்து தற்போது வரை யாரும் புகாரளிக்கவில்லை என்பதினால், அப்பகுதி காவல் அதிகாரிகள் முன்வந்து விசாரணை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

ம.பி.யில் லாரி மோதி பழங்குடியினர் 5 பேர் பலி!

காா் மோதியதில் நடந்து சென்றவா் பலி

அரூா் அருகே தேனீக்கள் கொட்டியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


