சென்னை அருகே பெரும்பாக்கத்தில் ஏரியில் விழுந்து முதியவர் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்.
அரசன் கழனி, காரணை பிரதான சாலையையொட்டி உள்ள ஏரியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் திங்கள்கிழமை மிதந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், பெரும்பாக்கம் போலீஸôருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முதியவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
விசாரணையில் இறந்தவர், சித்தால பாக்கம், கன்னி கோயில் தெருவை சேர்ந்த மாசிலாமணி(70) என்பதும், அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும், மாசிலாமணி ஏரிக்குள் விழுந்து எப்படி இறந்தார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

கிணற்றில் விழுந்து சென்னை இளைஞா் உயிரிழப்பு

பள்ளத்தில் பைக் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மரக்கிளை முறிந்து விழுந்து பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




