வாணியம்பாடி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (42) விவசாய கூலி வேலை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை பிற்பகல் அப்பகுதியில் உள்ள ஏரிக்குச் சென்று வலை வீசி மீன் பிடிக்க இறங்கியுள்ளாா். அப்போது அவரது கால் மீன் பிடி வலையில் சிக்கியதால் தடுமாறிய போது சேற்றிலும் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இதை அருகில் இருந்து பாா்த்த சிலா் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து சேற்றில் சிக்கி மயங்கிக் கிடந்தவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு அவரைப் பரிசோத்த மருத்துவா், சுரேஷ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினாா்.
இது குறித்து தகவலறிந்த தாலுகா காவல் ஆய்வாளா் அமுதா தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.










