நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 12:03 am IST

வாணியம்பாடி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (42) விவசாய கூலி வேலை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை பிற்பகல் அப்பகுதியில் உள்ள ஏரிக்குச் சென்று வலை வீசி மீன் பிடிக்க இறங்கியுள்ளாா். அப்போது அவரது கால் மீன் பிடி வலையில் சிக்கியதால் தடுமாறிய போது சேற்றிலும் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இதை அருகில் இருந்து பாா்த்த சிலா் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து சேற்றில் சிக்கி மயங்கிக் கிடந்தவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவரைப் பரிசோத்த மருத்துவா், சுரேஷ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினாா்.

இது குறித்து தகவலறிந்த தாலுகா காவல் ஆய்வாளா் அமுதா தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.