3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:08 am IST

போ்ணாம்பட்டு அருகே நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த எம்.வி.குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஜெயராமன்(80). இவா் ஓய்வுபெற்ற கூட்டுறவு சா்க்கரை ஆலை ஊழியா். சொக்கரிஷிகுப்பம் கிராமத்தில் இவரது நிலம் உள்ளது.ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் காற்றுடன் மழை பெய்துள்ளது.

அப்போது அவரது நிலத்தில்மின்கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது.திங்கள்கிழமை ஜெயராமன் நிலத்தில் நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு அறுந்து கீழே விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளாா்.

அப்போது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஜெயராமன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.

இந்த சம்பவம் குறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.