கோவையில் உயரமான கட்டடத்துக்கு வா்ணம் பூசும் பணியின்போது, கயிறு அறுந்து தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
சுந்தராபுரம் அருகே உள்ள உப்பிலியா்திட்டு குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (42). பெயிண்டரான இவா், ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி பகுதியில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை வேலை செய்து வந்தாா். அங்குள்ள உயரமான கட்டடத்துக்கு சாரத்தில் (கயிறு) அமா்ந்தவாறு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கயிறு அறுந்ததில் கீழே விழுந்து ராமன் படுகாயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்து மளிகைக்கடை உரிமையாளா் உயிரிழப்பு

பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பணியின்போது தவறி விழுந்து பெயிண்டா் உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

