சிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் முதல்வர் விஜய் பேசுகையில்,
"நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு செய்த சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன்.
200 யூனிட் மின்சாரத்தில் 100 யூனிட் மின்சாரம் திமுக கொடுத்தது அல்ல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்தது.
ஸ்டாலின் சார் பதவிபோன கடுப்பில் அறிக்கையாக விடுகிறார். டாஸ்மாக் மூலமாக நீங்கள் பணம் சம்பாதித்தீர்கள். ஆனால் நாங்கள் மக்களுக்கு தொந்தரவாக இருந்த மதுக்கடைகளை மூடினோம்.
விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி.. இந்த ஒரு மாதத்தில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தோம்.
நிதி நெருக்கடி ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார்கள். அதையெல்லாம் சரிசெய்ய வேண்டாமா? விஜய் பொய் சொல்லி அரசியல் செய்ய வரவில்லை. அதனால் விவசாயிகள் கவலைப்பட வேண்டாம்.
தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரம் பரவி கிடக்கிறது. அதைத் தடுத்திருந்தால் இதனை பெண்களை, பெண் குழந்தைகளை இழந்திருப்போமா? எல்லாம் செய்துவிட்டு என் மீது பழிபோடுகிறார்கள்.
சிறந்த காவல் துறை அதிகாரிகள் அடங்கிய சிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும். வழக்குகள் அனைத்து விரைவாக விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை விரைவாக தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றங்களில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்கவும் சொல்லியிருக்கிறோம்" என்றார்.
Summary
Singappen Police Force to be Launched Next Week: Chief Minister Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
முதல்வர் விஜய்யுடன் தில்லி சென்ற 8 பேர்! யார் யார் தெரியுமா?
சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்!
விடியோக்கள்

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


