அதிகாரம் செய்கிறவர்களும் ஆதிக்க சக்திகளும் மட்டும்தான் கோட் - சூட் போட வேண்டுமா? என தான் கோட் - சூட் அணிவது பற்றி முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் முதல்வர் விஜய் பேசுகையில்,
"நாம் கோட் - சூட் எல்லாம் போட்டுகொண்டு வருகிறோம் இல்லையா, அதைப்பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள்.
ஏன் நாமெல்லாம் கோட் - சூட்லாம் போடக் கூடாதா? அதிகாரம் செய்கிறவர்களும் ஆதிக்க சக்திகளும் மட்டும்தான் கோட் - சூட் போட வேண்டுமா? நான் போடும் இரண்டே நிறம் நம்முடைய மனசு மாதிரி கருப்பு - வெள்ளை(பிளாக்- ஒயிட்).
எல்லாவற்றிலும் கருப்பு - வெள்ளை போலவே நான் இருப்பேன் என்பதற்குத்தான் இந்த கலர். அந்த கருப்பு நிறம், யாரைக் குறிக்கும் என்று உங்களுக்கே தெரியும்.
நீங்கள் தற்குறி தற்குறி என்று கூறியவர்கள்தான் இன்று உங்களை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறார்கள்.
உங்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவர்கள், எங்களுக்கு ஓட்டு போட்டால் தற்குறிகளா?
பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டுமே எனக்கு 2 கண்கள் மாதிரி. திருச்சி கிழக்கு என் செல்லப்பிள்ளை மாதிரி. வரும் இடைத்தேர்தலில் உங்களில் ஒருவரையே வேட்பாளராக நிறுத்தப்போகிறோம். என்னை வெற்றிபெற வைத்ததைப்போல, இடைத்தேர்தலில் அவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.
Summary
Chief Minister Vijay speaks about wearing a coat and suit
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழி
திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? தவெகவுக்கு ஆதரவா? துரை வைகோ பேட்டி
வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?
கோட் சூட் அணிந்து பதவியேற்ற முதல் முதல்வர்!
விடியோக்கள்

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


