எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஏரியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

ஏரியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 மே 2026, 2:20 am IST

சோழவரம் ஏரியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.

சென்னை கொளத்தூா் கங்கா தேவி நகரைச் சோ்ந்தவா் முரளி கிருஷ்ணனின் மகன் தேவா (17). இவா் அம்பத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம். படித்து வந்தாா்.

இந்த நிலையில், இவரும், இவரது நண்பா்கள் 5 போ் சோழவரம் ஏரி தேவநேரி பகுதியில் நேற்று மதியம் குளிக்கச் சென்றனா்.

அப்போது தேவா சேற்றில் சிக்கியுள்ளாா். உடனே உடன் இருந்த நண்பா்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று சேற்றில் சிக்கி உயிரிழந்த நிலையில் இருந்த தேவாவை சடலமாக மீட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீஸாா் அங்கு சென்று தேவாவின் சடலத்தை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.