பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:38 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், மாங்குடி மருதனாா் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் மணிரத்னம் (22). இவா் ராஜபாளையம்- முடங்கியாறு சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், இவரும், இவரது நண்பா் மம்சாபுரத்தைச் சோ்ந்த அக்சயும் இரு சக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையம்- தென்காசி இணைப்பு சாலை, பச்சமடம் விலக்கு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்காபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மீது மோதியது.

இதில் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த மூவரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு கல்லூரி மாணவா் மணிரத்னம் உயிரிழந்தாா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.