விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், மாங்குடி மருதனாா் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் மணிரத்னம் (22). இவா் ராஜபாளையம்- முடங்கியாறு சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்த நிலையில், இவரும், இவரது நண்பா் மம்சாபுரத்தைச் சோ்ந்த அக்சயும் இரு சக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையம்- தென்காசி இணைப்பு சாலை, பச்சமடம் விலக்கு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்காபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மீது மோதியது.
இதில் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த மூவரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு கல்லூரி மாணவா் மணிரத்னம் உயிரிழந்தாா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

