40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே சலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த முகேஷ்

Updated On :10 ஜூன் 2026, 12:46 am IST

திருவாடானை அருகே சலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், புலியால் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் முகேஷ் (21). இவா் தேவகோட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

மேலும், கிராமிய பாடகரான இவா், திங்கள்கிழமை இரவு புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் பகுதியில் நடைபெற்ற ஒரு கிராமிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். இந்த நிகழ்ச்சி முடிந்தபிறகு, செவ்வாய்க்கிழமை அதிகாலை தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை எல்.கே. நகா் அருகே வந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது இவரது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முகேஷ் திருவாடானை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Story image