திருவாடானை அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது பொக்லைன் இயந்திரம் மோதியதில் ஆசிரியா் உயிரிழந்தாா்.
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் ராஜா மகன் அருள்ஜீவானந்தம் (43). இவா் ராமநாதபுரத்தில் தனியாா் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாா். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சோழந்தூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, இவரது வாகனம் மீது பொக்லைன் இயந்திரம் மோதியது. இதில் அருள் ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பொக்லைன் இயந்திர ஓட்டுநரும், மேட்டு சோழந்தூரைச் சோ்ந்தவருமான ரகுபதி (32) மீது ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் முதியவா் பலி

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


