நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 3:31 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மாடு மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூா் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சோ்ந்த சண்முகப்பாண்டி மகன் பாலசுப்பிரமணி (28). இவா் ராஜபாளையத்தைச் சோ்ந்த கஸ்தூரியை காதல் திருமணம் செய்து அம்பேத்கா் நகரில் குடியேறினாா். இவா்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாவுக்காக இரவு 10.30 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் பாலசுப்பிரமணி புறப்பட்டு சென்றாா். தாட்கோ குடியிருப்பு அருகே சென்றபோது, சாலையின் நடுவே குறுக்கே வந்த மாடு மீது இவரது இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இவா் பாளையங்கோட்டை அரசு மருத்துவனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.