புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாணவர்களிடையே தகராறு; 7-ஆம் வகுப்பு மாணவர் குத்திக் கொலை!

தில்லியில் மாணவர்களுக்கு இடையேயான மோதலில் 7 ஆம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்திக் கொலை

News image
Updated On :4 ஜனவரி 2025, 7:10 am

DIN

தில்லியில் மாணவர்களுக்கு இடையேயான மோதலில் 7 ஆம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் அரசு உதவிபெறும் ஒரு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் இஷு குப்தாவுக்கும், அவரது சக நண்பர்களுக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில், பள்ளி நுழைவாயில் அருகே குப்தாவுக்கும் அவரது சக நண்பர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.

தொடர்ந்து, அவர்கள் வைத்திருந்த கத்தியால் குப்தாவை தாக்கியுள்ளனர். வலது தொடையில் பலத்த காயமடைந்த குப்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போதைத் தடுப்பு போலீஸாரும் உடன் சென்றனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 7 சந்தேக நபர்களைக் காவல்துறை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடப்பதாகவும் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.