இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

சத்தீஸ்கரில் மரணமடைந்த 8 வீரர்களில் 5 பேர் முன்னாள் மாவோயிஸ்டுகள்!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மரணமடைந்த பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேரில் 5 பேர் மாவோயிஸ்ட்டாக இருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 6:43 am

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மரணமடைந்த பாதுகாப்புப்படை வீரர்கள் 8 பேரில் 5 பேர் மாவோயிஸ்ட்டாக இருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் ஜன. 6 ஆம் தேதி பாதுகாப்புப் படை வீரர்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநரும் இதில் பலியாகியுள்ளார்.

டிஆர்ஜி மற்றும் பஸ்தார் படையைச் சேர்ந்த தலா 4 பேர் மரணம் அடைந்த நிலையில் இதில் 5 பேர் ஏற்கெனவே மாவோயிஸ்ட்டாக இருந்தவர்கள்.

அதனைக் கைவிட்டு பாதுகாப்புப் படைக்கு உதவும் விதமாக இணைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பஸ்தார் பகுதியில் 792 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.