சத்தீஸ்கரில் ஒரே நாளில் 108 நக்சல்கள் சரண்!
சத்தீஸ்கரில் ஒரே நாளில் 108 நக்சல்கள் சரணடைந்துள்ளது குறித்து...


சத்தீஸ்கர் மாநிலத்தில் வெகுமதி அறிவித்துத் தேடப்பட்டு வந்த 108 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழுவைச் சேர்ந்த பிஜாப்பூரில் 37 மாவோயிஸ்டுகள், தண்டேவாடாவில் 30, சுக்மாவில் 18, பஸ்தாரில் 16, நாராயண்பூரில் 4, கான்கரில் 3 என மொத்தம் 108 பேர் ஆயுதங்களை ஒப்படைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
சரணடைந்தவர்களில், ஆறு பேருக்கு தலா ரூ. 8 லட்சம் வெகுமதித் தொகையுடன் கூடிய பிரவு தளபதிகள் ஆவார்.
சரணடைந்த மாவோயிஸ்டுகள் பகிர்ந்துகொண்ட தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் ஒரு பெரிய ஆயுதக் குவியலையும் கைப்பற்றியுள்ளனர்.
நாட்டிலிருந்து நக்சல்வாதத்தை முற்றிலுமாக அகற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 31, 2026 அன்று காலக்கெடு நிர்ணயித்துள்ளார். அதன்படி, சத்தீஸ்கரில் கூட்டாக நக்சல்கள் சரணடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...