தெலங்கானா ஆளுநராக ஷிவ் பிரதாப் சுக்லா புதன்கிழமை பதவியேற்றார்.
தமிழகம், தெலங்கானா உள்பட 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில், ஹிமாசலப் பிரதேச ஆளுநராகப் பணியாற்றிய ஷிப் பிரதாப் சுக்லா தெலங்கானா ஆளுநராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
அதன்படி, ஆளுநர் மாளிகையில் தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங், ஷிப் பிரதாப் சுக்லாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஹிமாசலப் பிரதேச ஆளுநராகப் பணியாற்றிய ஷிப் பிரதாப் சுக்லா, செவ்வாயன்று மாநிலத்திற்கு வருகைதந்தபோது ரேவந்த் ரெட்டி அவருக்கு அன்பான வரவேற்பு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Shiv Pratap Shukla was sworn in as Telangana Governor on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலங்கானா: அரசு மருத்துவமனைகளில் சர்வதேச மருத்துவ சேவை - உயர்நிலை ஆய்வுக் குழு அமைப்பு

தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!
சித்தராமையா ராஜிநாமா ஏற்பு.. கர்நாடக அமைச்சரவையைக் கலைத்தார் ஆளுநர்!
தெலங்கானா மேலவை உறுப்பினர்களாக அசாருதீன், கோதண்டராமை நியமிக்க ஆளுநர் ஒப்புதல்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




