திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?

தமிழ்நாடு ஆளுநராக மணிப்பூர் ஆளுநர் அஜய்குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்படுவதாகத் தகவல்

News image

அஜய்குமார் பல்லா - கோப்புப் படம்

Updated On :5 மார்ச் 2026, 10:06 pm IST

தமிழ்நாடு ஆளுநராக மணிப்பூர் ஆளுநர் அஜய்குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என். ரவி, மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், தமிழகத்துக்கான ஆளுநராக மணிப்பூரின் ஆளுநர் அஜய்குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தமிழக ஆளுநர் நியமனம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரையில் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.

ஆர்.என். ரவி, 2021 செப்டம்பர் 18 ஆம் தேதியிலிருந்து இன்றுவரையில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில்தான், மேற்கு வங்க ஆளுநராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, மேற்கு வங்க முதல்வருடன் கலந்தாலோசிக்காமலேயே மாநிலத்தின் ஆளுநர் மாற்றப்பட்டிருப்பதாக மத்திய அரசு மீது மாநில முதல்வர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

Summary

TN Governor RN Ravi transferred to Bengal; Ajay kumar Bhalla in-charge of Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.