முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பான் அட்டையை புதுப்பிக்க.. என்று வரும் தகவல்களை திறக்க வேண்டாம்!

பான் அட்டையை புதுப்பிக்காவிட்டால் என்று வரும் தகவல்களை திறக்க வேண்டாம் என்று எச்சரிக்கை

News image

கோப்புப்படம் - DIN

Updated On :8 ஜனவரி 2025, 4:42 pm IST

பான் அட்டையைப் புதுப்பிக்க வேண்டுமா என்று கேட்டு வரும் தகவல்களை திறக்க வேண்டாம், அது மோசடி அழைப்பாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது இந்தியா போஸ்ட் பேமேன்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த விதமான மோசடி நடத்தப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு இது தொடர்பான எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் பான் அட்டையை புதுப்பித்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று அச்சுறுத்தும் வகையில் வந்த மின்னஞ்சல் அல்லது குறுந்தகவலில் வந்த லிங்கை கிளிக் செய்தால், அதில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட பல விவரங்கள் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதுபோன்ற எந்தவொரு மின்னஞ்சல் அல்லது குறுந்தகவலையும் தாங்கள் அனுப்பவில்லை என்று வங்கித் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிஐபி உண்மை அறியும் பக்கத்தில மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், உங்கள் பான் அட்டையை புதுப்பிக்காவிட்டால் 24 மணி நேரத்தில் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று வரும் தகவல் உண்மையல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற குறிப்பிட்ட வங்கியின் பெயரில் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் வரும்போது, வாடிக்கையாளர்களும், இணைப்பில் கேட்கப்படும் தகவல்களை சந்தேகமின்றி கொடுத்துவிடும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுபோல, இணையதளப் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து நீதிமன்ற ஆணை வந்திருப்பதாக வரும் மின்னஞ்சல்களையும் நம்ப வேண்டாம் என்றும், நீதிமன்றங்கள் அதுபோன்ற ஆணைகளைப் பிறப்பிக்கவில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.