மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி தேர்தல்: வாக்காளர்களிடம் நன்கொடை பெறும் ஆம் ஆத்மியின் பிரசாரம் தொடக்கம்

தேர்தல் பிரசாரத்தில் வாக்காளர்களிடம் நன்கொடை கேட்கும் நிலையில் தில்லி முதல்வர்!

News image
- PTI
Updated On :12 ஜனவரி 2025, 10:00 am

DIN

புது தில்லி : தில்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் உள்பட செலவுக்காக ரூ. 40 லட்சம் வரை தனக்கு தேவைப்படுவதாக தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான அதிஷி பேசியுள்ளார்.

தில்லி யூனியன் பிரதேச தேர்தலில் ஒரேகட்டமாக பிப்ரவரி 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வரும் அதிஷி பேசியிருப்பதாவது, “இத்தேர்தலில் போட்டியிட எனக்கு ரூ. 40 லட்சம் வரை தேவை. இதற்காக தில்லி மக்களிடமும் நாட்டு மக்களிடமும் ஆதரவு கோருகிறேன். உங்கள் ஆதரவுடன் தேர்தலில் கல்காஜி பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறேன்” என்று பேசியுள்ள அவர், மக்களிடம் தேர்தல் நன்கொடை அளித்து உதவுமாறு சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “கடந்த 5 ஆண்டுகளில், ஒரு எம்.எல்.ஏ.வாக, ஓர் அமைச்சராக, இப்போது, தில்லி முதல்வராக நான் இருப்பதற்கு.. நீங்கள் எனக்கு ஆதரவு தந்தீர்கள். உங்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் இல்லாமல் இவையனைத்தும் சாத்தியமாகியிருக்காது.

கல்வியறிவு பெற்ற ஒரு இளம் பெண்ணாக நான் அரசியலில் தடம்பதிக்க, நீங்கள் அளித்த நம்பிக்கையும் நன்கொடையும் உதவியது. நீங்கள் இல்லாமல் நான் தனியொரு ஆளாக இந்த பாதையில் செல்ல முடியாது.

இப்போது, இன்னொரு தேர்தல் பிரசாரத்தை எதிர்கொள்ளவிருக்கிறோம். இதில் உங்களின் பேராதரவு மீண்டும் தேவைப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தில் உங்களின் பங்களிப்பாக நன்கொடை அளித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் (அதற்கான இணையதள முகவரியையும் அவர் பகிர்ந்துள்ளார்).

நாம் ஒன்றிணைந்து முன்னேற்றத்துக்கான இந்த பாதையில் நம்பிகையுடன் தொடருவோம்” என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.